6/6/10

மதம்? மனிதம்?


நாம் யார்?
ஒரு வகை உயிரினம்.

நாம் எங்கே இருக்கிறோம்?
இந்த பூமியில்.

இந்த பூமி எங்கே இருக்கிறது?
சூரியக் குடும்பம் எனும் பால்வளித்திரலில்.

இந்த சூரியக் குடும்பம் எங்கே இருக்கிறது?
கோடிக்கான பால்வளித்திரல்கள் நிறைந்த "அண்டம்" என்பதில்.

இந்த அண்டம் எங்கே இருக்கிறது?
??????????????????????????????????????????????????????
இந்தக் கேள்விக்கு விடை "முடிவிலி"யாகத்தான் இருக்க முடியும்...!!
" மானுடம் தேடும் மாயை அது "

சரி, அது போகட்டும்!


இந்த பூமி எப்படி தோன்றியது?
கிட்டத்தட்ட 14 கோடி ஆண்டுகளுக்கு முன் "BIG BANG " என்ற "அண்டப் பிரளயம்" நடந்த போது தோன்றியதில் ஒன்றுதான் "சூரியக்குடும்பம்" என்ற நாம் பூமி அடங்கிய பால்வளித்திறல்.

இந்த பூமியில் உயிரினங்கள் எப்படி தோன்றியது?
காலப்போக்கில் இயற்கையில் ஏற்பட்ட வேதியியல் மாற்றங்கள் (உயிரியல் விளைவுகள்) காரணமாக....

இந்த பூமியில் முதலில் தோன்றிய உயிரினம் எது?
ஒரு செல் உயிரினம்... (அறிவியல் பூர்வமாக ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை) எ.கா. அமீபா.

மனித உயிரினம் எவ்வாறு தோன்றியது?
காலப்போக்கில் இயற்கையாக ஏற்பட்ட உயிரியல் மாற்றங்களால் தோன்றியதுதான் மனித உயிரினம் என்றும் அறிவியல் சான்றுகள் விளக்குகின்றன...

மனித உயிரினம் எப்போது தோன்றியிருக்கலாம்?
கிட்டத்தட்ட 40000 ஆண்டுகளுக்கு முன்னால் இருக்கலாம் என்று அறிவியல் சான்றுகள் விளக்குகின்றன...


மரியாதைக்குரியவர்கள்: தோடா... இப்ப இன்னாதா சொல்ல வர்ற...?

நான்: சாரி பாஸ்... காண்டாகாத... தோ பாரு.. மேட்டர் இன்னான்னா...?


நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் மனித இனத்திற்கு உண்டான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் "மனிதன்" என்ற முழுமை நிலையை அடைந்தது வெகு சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னாள் என்பது நம்மால் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை.. அதற்கு முன் மனிதனும் "ஆறறிவு" அற்ற விலங்குகளாய்தான் திரிந்துகொண்டிருந்தான்.  காலம் மாற மாற இயற்கையின் கட்டாயத்தாலும் சூழ்நிலையின் காரணத்தாலும் தனது ஆறாவது அறிவினைப் பயன்படுத்தி தனது தேவைகளை கண்டுபிடித்து ஆட்கொள்ளத் தொடங்கினான். விலங்குகளிலேயே மிகவும் அறிவுப்பூர்வமான விலங்காக மனிதன் இருந்தால் தன் இனத்தை அவனால் எளிதாக காத்துக்கொள்ள முடிந்தது... இப்படி விலங்குகளாக இருந்த மனிதன் தனது கூட்டம் பெருகப் பெருக தனக்குள் ஏற்படுத்திக்கொண்ட முதன்மையான மிகப்பெரிய முன்னேற்றம்தான் "சைகை" என்ற சங்கேத மொழியாக இருந்திருக்கக்கூடும்..

சங்கேத மொழியின் அடுத்தகட்ட அபரிமிதமான வளர்ச்சிதான் "மொழி".... (அது என் தாய்மொழி "தமிழ்"ஆக இருக்குமானால் எனக்கும் பெருமைதான்). இதற்கு இடைப்பட்ட காலத்தில்தான் மனிதன் கூட்டம் கூட்டமாக சேர்ந்து வாழத் தொடங்கினான்.. இவ்வாறு கூட்டமாக வாழக் கற்றுக்கொண்ட அவன் கூட்டம் என்று ஒன்று இருந்தால் அதை கட்டுபடுத்த "தலைமை" என்று ஒன்று வேண்டும் என்பதை உணர்ந்தான்...

இப்படி என்னதான் தலைமை பொறுப்பை ஏற்படுத்தி கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயன்றாலும் அவனுள் "காட்டுமிராண்டித்தனம்" அதிகமாகிக் கொண்டுதான் இருந்தது... ஆனாலும் இயற்கைக்கும் தன்னை மிஞ்சிய சக்திகளுக்கும் அவன் பயந்துகொண்டுதான் இருந்தான். இந்த "பயம்" என்றதை ஆதாரமாகப் பயன்படுத்திக்கொண்டு அவன் படைத்தது தான் "மாயை" (VIRTUAL POWER) (அசாதாரண மெய்நிகர் சக்தி) என்ற “நம்பிக்கை”... இதில் தீமை செய்பவை "பேய்' என்றும் நன்மை செய்பவை "கடவுள்" என்றும் அவன் தன் கூட்டத்தை நம்ப வைத்து கட்டுப்பாட்டில் வைக்கத் தொடங்கினான்.... பின்பு காலப்போக்கில் அவனுடைய படிப்படியான அறிவுப்பூர்வமான மற்றும் பரிணாம வளர்ச்சியைதான் "நாகரீகம்" எனலாம். அந்த நாகரீகம் வளர வளர அவனுடைய சுற்றுப்புறம் மற்றும் சூழ்நிலைக்கேற்ப வளர்ந்ததுதான் "கலாச்சாரம்". இவ்வாறு காலப்போக்கில் மனித இனம் பெருகப் பெருக பலதரப்பட்ட நாகரீகங்களும் பல்வேறு வகையான கலாச்சாரங்களும் தோன்றினாலும் பெரும்பான்மையானோர் காட்டுமிராண்டித்தனம்மகவே வாழ்ந்து வந்தனர். இப்படியே மனித இனம் பெருகப் பெருக தங்களுக்குள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் ஏற்றத் தாழ்வுகளாலும் போட்டி பொறாமைகளாலும் மனித இனம் அழிந்து விடக் கூடாது என்ற நல்லெண்ணத்துடன் சில அறிவு படைத்தவர்கள் தம் மனித இனத்தை பண்படுத்த தொடங்கினார்கள்...

இப்படிப் பிறந்ததுதான் "பண்பாடு". என்னதான் பண்பாட்டை ஊட்டி ஊட்டி வளர்த்தாலும் அவனுள் மிருக உணர்ச்சி தலைவிரித்து ஆடிக்கொண்டுதான் இருந்தது... வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முயற்ச்சியில் பல்வேறு நாகரீகத்தையும் பல்வேறு கலாச்சாரத்தையும் உருவாக்கிக்கொண்டே பறந்து விரிந்து கொண்டிருந்தது மனித இனம்...
இவ்வாறு கட்டுப்பாடின்றி மிகப்ப பிரம்மாண்டான அளவில் பரந்து விரிந்து கொண்டிருந்த மனித இனத்தை ஒரே கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற [ பொதுநலமா (அ) சுயநலமா என்பது தெரியாது ] நோக்கத்தில் அபரிமிதமான சக்திகளுடனும், தத்துவங்களுடனும் மனிதனால் படைக்கப்பட்ட "மாயை"யின் மறுஉருவம் தான் "மதம்". இந்த மதம் என்ற மந்திர சக்தி ஆரம்பத்தில் வரவேர்க்கப் படவில்லை என்றாலும் பல போராட்டங்களுக்குப் பின்னால் கொஞ்சம் கொஞ்சமாக பெரும்பாலானோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பரவ ஆரம்பித்தது...

ஆனால்....! உண்மையிலேயே மனித இனத்தின் அழிவு இங்குதான் ஆரம்பித்தது எனலாம்....!! ஆம்... எப்படி என்றால்..? எப்படி ஒரு உயிரினத்திற்கு இரண்டு உயிர் இருக்க முடியாதோ!? எப்படி ஒரு பிறப்பிற்கு இரண்டு தாய் இருக்க முடியாதோ!!? அதே போல மதமும் ஒரே தாய்க்கு பிறந்த ஒரே உயிராக இருந்திருக்க வேண்டும்...!!! ஆனால், மதத்தைப் படைத்த மனிதனின் "ஆறாம் அறிவு"தான் அவனின் சாபக் கேடோ என்னமோ...? ஒரே மாதிரியான சிந்தனையால் பல்வேறு இடங்களில் குறுகிய கால கட்டத்தில் "பல்வேறு" மதங்களை உருவாக்கி விட்டான்... சரி, அப்படியே பல மதங்கள் உருவாகி இருந்தாலும் அதில் அனைவரும் வலியுறுத்திய தத்துவங்கள் கிட்டத்தட்ட ஒன்றுதான்...

ஆனாலும், மனித இனம் அன்போடும் பண்போடும் வாழ்வதற்காக மதத்தின் மூலமாக சொல்லப்பட்ட தத்துவங்களை எல்லாம் விட்டுவிட்டு என் மதம்தான் உயர்ந்தது என் மதம்தான் பெரியது என்று மதம் மதம் என "மதம்" பிடித்து மனிதனை மனிதனே அழித்துக்கொல்கிறான்... ஒரு மனிதன் எங்கு பிறக்கிறானோ அதைப் பொறுத்துதான் அவனுடைய மதம் அவனைப் பற்றுகிறது... அது அவனை பண்படுத்தும் கவசமாக இருக்க வேண்டுமே தவிர அதுவே அவனையே அழிக்கும் ஆயுதமாக ஆ(க்)கிவிடக்கூடாது.

நான் இங்கு எந்த ஒரு மதத்தையும் குறை கூறவில்லை.. ஆனால், 'மதம்' என்ற பெயரில் "மதம்" பிடித்து அழிய வேண்டாம் என்றுதான் வலியுறுத்துகிறேன்..


" மனிதம்" "மதம்"

மனிதம் என்பதில் மதம் அடங்கட்டும்...! அனால் மதம் என்பதில் மனிதம் அடங்கலாகுமோ...?

அன்பை விதைப்போம், அறத்தை வளர்ப்போம், மனிதம் காப்போம், மகிழ்ச்சியாய் வாழ்வோம்.


வருகைக்கு நன்றிகள்... வந்தற்கு வேண்டுகோள்...


சொற்க் குற்றம் இருப்பின் மன்னிக்கவும்... பொருட் குற்றம் இருப்பின் விளக்கவும்...

தங்களின் முத்தான கருத்துக்களும் பொன்னான ஓட்டுக்களும் தான் என் பதிவுகளுக்கு படிக்கட்டுகள்...







6/4/10

இருண்ட கண்டம்

தமிழக கிராமங்களில் தொடர் மின்வெட்டு...!?



கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன் தமிழகத்தின் அனைத்து எதிர்கட்சிகளும் மின்வெட்டினை கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் சாலை மரியல்கும் நடத்தினர். அதன் விளைவாக சென்ற வாரத்தில் ஒரு நான்கு நாட்களுக்கு மட்டும் ஓரளவிற்கு வெட்டின்றிய சீரான மின்சாரம் கிடைத்தது! அனால் கடந்த நான்கு நாட்களாக நிலைமை என்ன? (குறிப்பாக " பெரம்பலூர் மாவட்டம் மற்றும் கிராமப்புற பகுதிகள்.") நான்கு நாட்களில் அதிகபட்சமாக மொத்தத்தில் சுமார் ஒரு பத்து மணி நேரம் தான் மின்சாரமே வந்தது!!!! முன்பாவது ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு மணி நேரம்தான் மின்வெட்டு இருந்தது. அனால் இப்போது " தங்கள் 'சுய தேவையை மட்டுமாவது பூர்த்தி செய்துகொள்ள' மூன்று அல்லது நான்கு மணி நேரமாவது மின்சாரம் கிடைத்தால் போதும்" என்ற நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி! நமக்கு நாமே "ஆப்பு" வைத்துக் கொண்டோமோ? என்றெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது!

எங்கள் பகுதி ஏழை விவசாயி ஒருவர்...

"அறுவடை நாள் நெருங்கிடுச்சே? இன்னும் ஒரு நாலு நாளைக்கு தண்ணி பாச்சினா போதுமே, இல்லைனா புள்ளைக பூராவும் கருகி போயிடுமே... அய்யோ.. இந்த பாழாப்போன கரண்ட எப்ப விடுவானுக? ஒரு ரெண்டுமணி நேரம் தொடர்ந்து விட்டாக்கூட எம் புள்ளகள காப்பாத்திடுவேன் சாமி... எம் பொண்டாட்டியோட தாலிய அடகு வச்சுதான் இந்த சாகுபடியே பண்ணினேன்! இனி அதுக்கும் வழி இல்லன்னா...? எங்கயாவது சுடுகாட்ல போயி படுத்துக்க வேண்டியதுதான்...."

எங்கள் பகுதி ஏழை தாய்குலம் ஒருவர்...

தாய்குலம்: "சார், எப்படியாவது புள்ளைய காப்பாத்துங்க, ரெண்டுநாளா காய்ச்சல் விட்டு விட்டு அடிக்குது, வவுத்தால போயிட்டு வாந்தி எடுத்துகிட்டே இருக்குதுங்க... "

அ. மரு: "ஏம்மா? புள்ளைய இப்படியா கவன கொரவா பாத்துகிறது? இங்க பாரு... ஒடம்பு பூரா ஒரே கொசு கடி... கடைசி டைம்ல கொண்டு வந்துட்டு அப்புறம் எங்கள கொற சொல்லறது...

தாய்குலம்: "என்ன சார் பண்ணறது..? பகலு பூராவும் அக்னி வெயிலு கொளுத்துது.. ராவானா கொசுத் தொல்ல... வீதீல சாக்கட கட்டி உட்டதோட சரி..., இதுவரைக்கும் யாரும் வந்து சுத்தம் பன்னது இல்ல... அப்படியே அதிசயமா வந்துட்டாலும் சாக்கடய அள்ளி அங்கேயே போட்டுட்டு போயிடறாங்க... கொஞ்ச நேரமாவது கொலந்தைகல பேன் காத்துல போடலாமனு பாத்தா... பத்தாததுக்கு.. இந்த நாசமாபோனவணுக ராத்திரி பகல்னு பாக்காம கரண்ட கட் பண்ணிடறாங்க.. நாங்கெல்லாம் புள்ளைங்கள வச்சுகிட்டு வாழரத சாகரதான்னு தெரியலைங்க சார்.... ?? "

அ. மரு: அதெல்லாம் எனக்கு தெரியாது... அது எங்க டிபார்ட்மென்டும் வேலையும் கிடையாது... சரி சரி.. ஊசி போட்டாச்சு... மாத்திரைய வாங்கிட்டு எடத்த காலி பண்ணு... உன்ன மாதிரி இன்னும் எத்தன பேரு நிக்கிறாங்க பாரு...

"முன்னறிவிப்பில்லாத தொடர் மின்வெட்டு" காரணமாக, இப்படி இன்னும் பல கொடுமைகள் தினசரி எங்கள் சுற்று வட்டாரத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது... நாங்கள் எங்கு சென்று யாரிடம் முறையிடுவது? தனியாக சென்று கேட்டாலும் சரி, கூட்டமாக சென்று கேட்டாலும் சரி... ஏதாவது ஓர் வகையில் ஆப்பு வைப்பார்கள் என்பது உறுதி...! என்னதான் பண்ணுவது...? சரி... கொதித்து எழலாம் என்றால் ஒடுக்கபடுவதற்கு என்றே அடக்குமுறை காத்திருக்கிறது... போட்டதை தின்று விட்டு 'அடிமாடு' போல் அடங்கி போகலாம் என்றால் 'ஆண்மை' இல்லையா என்று அடிமனம் குமுறுகிறது... சரி.. போராடத்தான் முடியவில்லை... புலம்பியாவது தள்ளலாம்....

இதற்க்கெல்லாம் காரணம் "பற்றாக்குறை" என்கிறார்கள்...! பற்றாக்குறைக்கு என்ன காரணம்...? நாம் தேவைக்கு அதிகமாக செலவிடுகிறோமா...? அல்லது.. நம் தேவையை நம்மால் பூர்த்தி செய்து கொள்ள முடியவில்லையா...? இல்லை.. நமக்கு கிடைக்க வேண்டியது வேறு எங்கோ மறைமுகமாக செலவிடப்படுகிறதா...? இதில் எது உண்மை..? இதுவரை இல்லாத பற்றாக்குறை இப்போது எப்படி புதிதாய் வந்தது...?

அடிப்படை வசதிகளே இல்லாமல் இருப்பவர்கள் இன்னும் எத்தனையோ பேர்!

> நாம் தேவைக்கு அதிகமாக செலவிடுகிறோமா...?

இதில்... நம்மில் 20 % பேர் தேவைக்கு அதிகமாகவோ கவனக்குறைவாகவோ அல்லது அலட்சியமாகவோ செலவிடுவதாக வைத்துகொள்வோம்... இப்போது இல்லை என்றாலும் எப்போதாவது தேவைப்படும் என்ற முன்னெச்சரிக்கை உணர்வு நம்மில் எத்தனை பேருக்கு என்று சொல்ல முடியுமா...? ஏன் தொலைநோக்கு சிந்தனை நம்மில் பலருக்கும் இல்லை... ?

> நம் தேவையை நம்மால் பூர்த்தி செய்து கொள்ள முடியவில்லையா...?

நம் தேவையை நாம் மிகச் சரியாக உணர்ந்தால் மட்டுமே முடியும்...! மேலும்.. எதிர்காலத்தில் இப்படி ஒரு நிலை வராமல் இருக்க நாம் மிகுந்த விழிப்புடனும் மாற்று திட்டத்துடனும் தயார் நிலையில் இருக்க வேண்டும்...!! அப்படி எதுவும் நம்மிடம் இல்லை...!!?

> இல்லை.. நமக்கு கிடைக்க வேண்டியது வேறு எங்கோ மறைமுகமாக செலவிடப்படுகிறதா...?

கிட்டத்தட்ட 80 % அடிப்படை மக்களுக்கு கிடைக்கவில்லை என்றுதான் சொல்லலாம்..! அப்படி என்றால்.. இவை எங்கு செலவிடப்பட்டிருக்கலாம்...? முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் நகரங்களுக்கும், தினசரி புதிது புதிதாய் தோன்றிக்கொண்டிருக்கும் "பினாமிகளின்" தொழிற்சாலைகளுக்கும், காலம் தவறாமல் நடக்கும் கட்சி மாநாடுகளுக்கும், முக்கியப் பிரமுகர்கள் வீட்டு கல்யாணம் மற்றும் வைபோகங்களுக்கும்.. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...!

அப்படியென்றால்... தொழில் அதிபர்களும், முக்கிய பிரமுகர்களும் மட்டும் தான் முக்கியமா? விவசாயிகளும் கிராம புற மக்களும் முக்கியம் இல்லையா? இவர்களெல்லாம் மனிதர்கள் இல்லையா? அல்லது வாழ தகுதியற்றவர்களா?
மனிதன் உயிர் வாழ எது முக்கியம்? உயிர் தொழிலா?( விவசாயமா? ) இல்லை... உயர் தொழிலா? ( தொழிற்சாலைகளா? )
இது போன்ற சமூக பிரச்சனைகளை தனி மனிதனால் சமாளிக்க முடியாது என்பதால் தான் நமக்கு நாமே உருவாக்கிக் கொண்டது "அரசாங்கம்". அந்த அரசாங்கத்தை நிர்வாகிக்க நாமே தேர்ந்தெடுப்பதுதான் "அரசு".
காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை நாம் ஒவ்வொருவரும் செய்யும் அன்றாட செலவுகளில் நேரிடையாகவோ மறைமுகமாகவோ "வரி" செலுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். நம்மை நிர்வாகிக்க நம்முடைய வரிப்பணம்தான் நமக்கு "அரசு" மூலமாக செலவிடப் படுகிறது. நமக்கு  யாரும் இலவசமாக எதையும் கொடுத்து விடவில்லை... அப்படி அனைவருக்கும் பொதுவான சொத்தை யாரோ சிலர் மட்டும் திருட விடலாமா...? ஏன் அது அனைவருக்கும் சமமாக கிடைக்கவில்லை..? (நான் இங்கு அனைவரும் திருட வேண்டும் என்று சொல்லவில்லை) ... சிந்தியுங்கள். அரசில் இருப்பவர்கள் "சிலர்" சொல்கிறாகள்... "தன் மக்கள் நலம்.. தன் நலம்" இதை நன்கு உணர்ந்து பாருங்கள் புரியும்.. "தன் மக்கள்" நலம்... "தன் நலம்"

இப்படி தன்னலம் கருதி நம்மில் பலர் கிடைப்பதை சுருட்டிகொல்லுவதால் தான் அது இறுதியில் அனைவரையும் பாதிக்கிறது... சுருட்டிகொண்டவன் தப்பித்துக் கொள்கிறான். பாமரன் பாதிக்கப்படுகிறான்.

நமது கண்களை (மக்கள்) நமது கைகளால் (தவறான அரசியல்) நாமே குத்திக் கொள்ளலாமா (அழித்துக்கொல்லுதல்)?

I don't know... what the "F" is going here!!

திருடனைப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...

"அடிமாடு" வாழ்க்கையா? "ஆண்மை" தனமான வாழ்க்கையா? நடப்பது நடக்கட்டும்....

தங்களின் முத்தான கருத்துக்களும் பொன்னான ஓட்டுக்களும் தான் என்ன பதிவுகளுக்கு படிக்கட்டுகள்...


Followers

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Blogger Templates