3/31/12

Indian Currency Valuation history








Indian Currency Valuation history

Year
Exchange rate
(rupees per US$)
19525.000
19707.576
19758.409
19807.887
198512.369
199017.504
199532.427
200045.000
200648.336
2007 (Oct)
38.48
2008 (June)42.51
2008 (October)48.88
2009 (October)46.37
2010 (January 22)46.21
2011 (April)44.17
2011 (September 21)48.24
2011 (November 17)50.97
2011 (November 24)52.11
2011 (December 15)53.65

ஜனநாயக நாட்டில் தன் வாக்குரிமையின் முக்கியத்துவம் அறியாமல் தனது ஓட்டை அல்ப காசுக்கும், இலவசங்களுக்கும் ஏமாந்து தவறான அரசியல்வாதிகளுக்கு வாக்களித்து மாட்டிக்கொள்கிறார்கள். தங்களின் அறியாமையால் தவறு செய்துவிட்டு பின்பு ஆள்பவர்களை குறை சொல்வது... சற்று வரலாற்றை திரும்பி பாருங்கள்... 1952 -ல் சர்வதேச நாணயத்திற்கு எதிரான இந்திய நாணயத்தின் மதிப்பு ரூ. 5 . ஆனால், இன்று 2012 -ல் அதன் மதிப்பு ரூ. 55 . அதாவது, 11 மடங்கு நாம் வீழ்ச்சி அடைந்துள்ளோம்.. ஆகா கிட்டத்தட்ட 60 வருடங்களாக நாம் பொருளாதாரத்தில் பின்நோக்கித்தான் சென்றுகொண்டு இருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது.. பற்றாக்குறைக்கு கருப்புப்பணம் வேறு... 200 கோடி இந்திய மக்களில் எத்தனை மா மேதைகள் இருந்தும் நம்மால் முன்னேற முடியவில்லை என்பததுதான் பகிரங்கமான உண்மை..!. வெட்கப் படவேண்டிய விஷயம்..!! கல்வி, அறிவியல், தொழிநுட்பம் என பல துறைகளில் நாம் மற்ற நாடுகளுக்கு இணையாகவும் அதை விட சிறப்பாகவும் உள்ள நாம் பொருளாதாரத்தில் மட்டும் இன்னும் தன்நிறைவடைய முடியவில்லை... காரணம் அப்பாவி மக்களின் அறியாமையையும் சிலபல முட்டாள் சுயநல அரசியல்வாதிகளும், கறுப்புப் பணம் சேர்க்கும் தே...பி..கள்.. தான்.... (*தேசிய பிச்சைகாரர்கள்..) நம்மிடையே உண்மையான நாட்டுப்பற்று உள்ளதா? உன் வீட்டில் உன் பணத்தை, உன் உடைமையை மாற்றான் ஒருவன் எடுத்தால் விடுவாயா? உன் குடும்பத்தை மாற்றான் ஒருவன் நிர்வாகம் செய்வதை ஒத்துக்கொல்வாயா? உன் உரிமைகளை உணர்வுகளை மாற்றான் அனுபவிக்க சம்மத்திபாயா? உன் சொத்துக்களை மாற்றான் முடக்கினால் விட்டுவிடுவாயா? இவை எதற்குமே நீ சம்மத்திகா மாட்டாய்.... உன்னிடம் உண்மையான நாட்டுப்பற்று இருந்தால்..! உன் வீட்டையே சரிசெய்ய முடியவில்லைஎன்றால் நாட்டை எப்படி...? உன்னைப் பற்றிய உன் வீட்டைப் பற்றிய சுயநலம் இருந்தால்தான் உன் நாட்டைபற்றிய சுயநலம் வரும்........!!! அப்படியென்றால்... ஏன் இந்தியர்களை ஒரு இந்தியன் ஆளக்கூடாது...? 200 கோடியில் ஒரு ஆற்றல் மிக்க அறிவு மிக்க இந்தியன் கூட இல்லையா...?! ( அதே போல, எட்டுகோடி தமிழனை ஆட்சி செய்ய ஒரு தன்னலமற்ற தமிழன் இல்லையா?)) உண்மையான நாட்டுப்பற்று உள்ளவன்தான் தான் தாய்நாட்டை உயர்த்த முடியும்... அந்நியர்களிடம் அடமானம் வைத்துவிட்டதால் இப்போது நம்மையே நாம் நொந்துகொள்ள வேண்டியத்துதான்... மானமுள்ள இந்தியர்கள் ஒவொருவரும் தன் உரிமையையும் சரி.. உணர்சிகளையும் சரி.. அடுத்தவனுக்கு விட்டுத் தரமாட்டான்... இனியாவது சிந்திப்போம்.. சரிசெய்வோம்...

3/24/12

வளமான எதிகாலத்தை பெற...




அரசாங்கத்தை உருவாக்குவது மக்கள். ஆனால், மக்களை உருக்குலைப்பது அரசாங்கம்...!?


காரணம்.. பதவி, பணம், அதிகாரம்...!

மக்களாட்சி என்பது பெயரளவில் தான்.. ஆட்சி அமைத்தவுடன் அதிகாரம் அவர்கள் கையில்.. முதல்வரின் அதிகாரம் அமைச்சர்கள் மேல் பாய்கிறது, அமைச்சர்களின் அதிகாரம் அந்தந்த துறை நிர்வாகிகள் மேல் பாய்கிறது, துறை நிர்வாகிகள் அப்பாவி பொதுமக்கள் மீது காட்டுகிறார்கள்...

இதில் எவரேனும் உண்மையாய் நடந்தால்... அவர்களின் பதிவிக்கும் பாதுகாப்புக்கும் உத்திரவாதம் கிடையாது... ஒவ்வொருவரும் தங்களை காத்துக்கொள்ள தாழ்ந்து போகிறார்கள்... (சுயமரியாதை அற்ற, ஆண்மைதனமற்ற உரிமையை கடமையை செய்ய இயலாதவர்களாக) இதுபோக, ரத்த புற்று நோய் போல அரசின் உடல் முழுவதும் பரவியுள்ள லஞ்சம்... மக்களின் பணத்தை மறைத்துவைத்து மதிப்பில்லாமல் கருப்பாகி அவர்களும் பயன்படுத்த முடியாமல் எவருக்கும் பயன்படாமல் மக்கி மன்னாகச் செயும் கருப்புப்பன கனவான்கள்.. அறிவுக்கு அல்லாது விலைக்கு கிடைக்கும் கல்வி... ஒருசார் செய்திகளையும் பரப்பியும் பகுத்தறிவை குழிதோண்டி புதைக்கும் மீடியாக்கள், மிஞ்சியுள்ள அறிவை மழுங்க வைத்து உயிரையும் குடிக்கும் மதுக்கடைகள், கலாச்சாரத்தை வளர்க்காமல் ஒழுக்கத்தை சீர்குலைத்து வன்முறையை வளர்த்துவிடும் பல சினிமாக்கள், மனிதம் எது என்பதை உணராத மதவாதிகள், தொலைநோக்கு சிந்தனை இல்லாத அரசு, எதற்கும் ஆகாத எதிர்கட்ச்சிகள், எதையும் எளிதாய் மறக்கும் மக்கள்... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..
மனிதன் படிப்படியாக கலாசாரம் கல்வி என்று உயர்ந்தும் பயனில்லை... வரலாற்றில் நாம் எப்படி வந்தோம் என்கிற உண்மைகள் அந்தந்த கால ஆட்சிகளால் மறைக்கப்பட்டுது மாற்றப்பட்டது உண்மையென்றால், இன்னும் சில நூறு வருடங்களில் சில அரசியல் குடும்பங்கள் மட்டுமே மனிதனை அடிமைகள் ஆக்கி ஆளப்போகிறார்கள் என்பதும் உண்மை...
மக்களே விழித்திருங்கள்...!
பெற்ற சுதந்திரத்தை பறிகொடுத்து விடாதீர்கள்...!?
மீண்டும் ஒரு உள்நாட்டு சுதந்திர போராட்டத்திற்கு வழிவகை செய்துவிடாதீர்கள்..!
தன்மானத்தை விட இந்த உலகில் பெரிய விஷயம் எதுவும் இல்லை...

உன் உரிமையை பெற நீ நீயாக இரு...
எவனுக்கும் அடிமாடாய் விலைபோகாதே...
அரைகுறை வாழ்க்கை வாளாதே...
ஆண்மைத்தனமற்றவ்னாய் இருக்காதே...
ஆற்றல்மிக்கவனை இரு...
நாம் உருவாக்கிய அரசு லஞ்சம் மற்றும் ஒழுங்கீனத்தல் இன்று புரையோடிய புண் போல ஆகிவிட்டது..
நாம் செய்த தவறை நாம் தான் சரி செய்ய வேண்டும்...
ஒரு கை ஓசை தராது...
ஒவ்வொரு கையும் சேர்ந்தால்தான் ஓசை கேட்கும்...
அழகான அறிவான ஆற்றல்மிக்க அரசை உருவாக்குவோம் என்ற ஓசை ஓங்கிக் கேட்க வேண்டும்...
ஒவ்வருவருக்கும் இது என் நாடு, என் அரசு, என் உரிமை, என் கடமை என்ற சுயநலம் வேண்டும்.. எவருக்கும் எதுவும் இலவசம் கிடையாது... உன் வாழ்க்கை வாழ்வதற்கு உரிய விலையை நீ கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறாய்.. இருந்தாலும் நீ எமாற்றப்படுகிறாய் என்பதை உணர்ந்து உன் உரிமைக்காக போராடு.. பஞ்சாயத் போர்டு முதல் பார்லிமென்ட் வரை சிவிலியன் (சாதாரண குடிமகன் ) ஒவொருவரும் தன் கடமையை நேர்மையாக செய்தால் போதும்.. நாம் அனைவரும் பணக்காரர்கள் தான்... நமக்கு கிடைக்கவேண்டிய அனைத்தும் கிடைக்கும்...
ஐசக் நியுட்டன் கூட 1000 முறை தோற்றுதான் பின்பு வெற்றி கண்டார்..
வளமான எதிகாலத்தை பெற...
வெற்றி கிடைக்கும் வரை போராடுவோம்..
மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குவோம்..
நாம்தான் வாழவில்லை... நம் சந்ததியினராவது நிம்மதியாய் வாழட்டும்...

Followers

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Blogger Templates